யுத்தம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நாட்டைச் சீரழிக்கின்ற நிலைமைக்கு யாரும் துணைபோகக் கூடாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண சபைகளினாலும் உள்ளூராட்சி மன்றங்களினாலும், மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்களை மேற்பார்வை செய்கின்ற செயற்பாட்டு மத்திய அரசின் கீழ் இருக்கின்ற மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சாக இருந்தால் மாகாணசபை எதற்கு இருக்கின்றதெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர்,
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்களை மேற்பார்வை செய்கின்ற செயற்பாடுகளையும், கண்காணிக்கின்ற பொறுப்புக்களையும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினது என மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிலே யுத்தம் நடைபெற்று முடிந்த நிலையிலும், 13 ஆவது திருத்தச்சட்டம் இன்னுமே நடைமுறைப்படுத்தப்படாமலிருக்கும் இச்சந்தப்பத்தில் இவ்வாறான சதித்திட்டங்களைக் எடுக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.
மீண்டும் நாட்டைச் சீரழிக்கின்ற நிலைமைக்கு யாரும் துணைபோகக் கூடாது எனவும் அரசியல் அதிகாரம் பகிரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மிகவும் தெளிவாக இருக்கின்றார்.
நாங்கள் எமது மாகாணத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் மிகவும் துரிதமாகச் செயற்பட்டு வருகின்றோம். மத்திய அரசாங்கத்திலுள்ள அமைச்சரிகளிடம் நாங்கள், கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாமல் உள்ளது. இதனையிட்டு நாம் பரிதாபம் அடைகின்றோம்.
எனவே அதிகாரப் பகிர்வு அரசியல் அதிகாரப் பகிர்வாகப் போகும் அதே சந்தர்ப்பத்திலே முதலீடுகளும், நிதி ஒதுக்கீடுகளும் மாகாண சபைகளுக்கு ஒரே நேரத்தில் பகிரப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செயற்படும் போதுதான் இந்த நாட்டிலே உண்மையான அதிகாரப் பகிர்வு இடம்பெறும். அதுவே நியாயமான அதிகாரப் பகிர்வாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக