
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் தமது கிராமம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயித்தியமலை கிராமத்தில் 300ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றபோதும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை மழை இல்லாவிட்டால் குடிநீரின்றி தாம் வாழும் நிலை ஏற்படும் என தெரிவித்த மக்கள் தமது கிராமத்தை ஊடறுத்து செல்லும் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி போன்ற இடங்களிற்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுவதாகவும் தமக்கு இதுவரை குடிநீரை வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக