சமூகத்தை நேசிப்பவர்களுக்கே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கே. யோகவேல் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எவ்வாறு போட்டியிடவுள்ளது. வேட்பாளர்களாக யாரை நிறுத்தவுள்ளது எனக் கேட்டபோது அவர் இந்தத் தகவலை இன்று வெளியிட்டார்.
இது தெர்டர்பாக மேலும் தெரிவித்த அவர் கூறியதாவது, யுத்தத்தின் பின்னர் உள்ளுராட்சி மன்றங்களினதும்;, மாகாண சபைகளினதும் அதிகாரப் பயன்பாடுகள் தொடர்பாக மக்களுக்கும் மற்றைய அரசியல் தலைவர்களுக்கும் நாங்களே பாடம் கற்பித்தோம்.
மாகாண சபையினூடாக தமிழர்களின் அரசியல் அதிகார இருப்பை தக்கவைத்துக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் அதிகாரத்தினை நோக்கி பயணிப்பது எவ்வாறு என்பதனை நடைமுறைக்குச் சாத்தியமாக 2008-2012 வரை கிழக்கு மாகாண சபையை செயல்படுத்திக் காட்டியவர்கள் நாங்களே.
மாகாண சபை முறைமை வேண்டாம் என்று 2008 இல் தேர்தலையே பகிஸ்கரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் நாம் கிழக்கு மாகாணத்தையும் உள்ளுராட்சி மன்றங்களையும் ஆட்சி செய்து காட்டிய பின்னரே 2012 இல் தேர்தலில் முந்தியடித்துக் கொண்டு களம் இறங்கின.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் அதிக ஆசனங்களை பெற்று மாகாண சபையினைக் கைப்பற்;றி ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்பிருந்தும் அரசியல் சாணக்கியம் இன்மையால்; அந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளது.
ஆனால் வெறும் 7 ஆசனங்களைத் தக்க வைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் உட்பட ஆட்சி அதிகாரத்தினை தன்னகப்படுத்தி ஆட்சி செய்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 இல் உள்ளுராட்சி மன்றங்களை பொறுப்பேற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்கள் ஆணையுடன் வீதிகள் அமைப்பது தொடக்கம் மயானங்களை பதிவு செய்வது வரை உள்ளுராட்சியின் நிருவாக செயற்பாடுகளை செவ்வனே நிறைவேற்றிக் காட்டியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களும் தவிசாளர்களுமே ஆகும்.
2008 க்கு முற்பட்ட காலப்பகுதியில் உள்ளுராட்சி மன்றங்கள் தேவையில்லை என்று கூறிய பல அரசியல் கட்சிகள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முனைவதை அறிய முடிகின்றது.
உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை உயிர்த்துடிப்புள்ளதாக மாற்றி மக்களுக்கு பயன் கிடைக்கச் செய்துள்ள பெருமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே சாரும் என்றும் அவர் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக