கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் வாகரை சூழலியல் பூங்காவில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.சசீலன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், எஸ்கோ நிறுவன உதவிப் பணிப்பாளர் மற்றும் எல்ஓஎச் நிறுவன கள உத்தியோகத்தர் மற்றும் மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளின் கல்வி நலன் கருதி கற்றல் உபகரணங்களும் அவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க உண்டியல்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் ஆரோக்கியா மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நலனுக்காக எல்ஓஎச் நிறுவனத்தினால் ஒரு இலட்சத்து தொண்னூறாயிரம் ரூபாய் 190,000.00 பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. ஆரோக்கியா மாற்றுத்திறனாளிகள் அமைப்பை சிறப்பாக வழி நடாத்திக் கொண்டிருக்கின்ற அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன், பலகலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
- See more at: http://www.battitamil.com/2015/12/blog-post_143.html#sthash.l6khIz3b.dpuf
0 facebook-blogger:
கருத்துரையிடுக