வியாழன், 3 டிசம்பர், 2015

திருகோணமலை அரச நிர்வாக சேவை ஊழியர்கள் போராட்டம்

இலங்கை அரச நிர்வாக சேவை ஊழியர்களால் இன்று வியாழக்கிழமை  திருகோணமலை மாவட்ட செயகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய வரவு செலவு திட்டத்தில் அரச நிர்வாக சேவை ஊழியர்களுக்கான  தீர்வையற்ற வாகன கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை மற்றும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபாய்  கொடுப்பனவினை தமது அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி குறித்த போராட்டத்தினை மேற்கொண்டனர். 
இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாண சபையைச் சேர்ந்த இலங்கை நிர்வாகசேவை உறுப்பினர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate