இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகளின் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை (15) செவ்வாய்க்கிழமை பகல் நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய மின்பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாளை காலை 9.00 மணி தொடக்கம் 17.00 மணிவரைக்கும் கல்குடா மற்றும் பாசிக்குடா போன்ற பகுதிகளில் பகல்நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பிரதேசங்களில் அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான மேலதிக விபரங்களை குறிப்பிட்ட அலுவலகத்தின் தொலைபேசி இலக்கமான 065 222 4439 அல்லது 065 222 2639 இற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக