மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் மட்டக்களப்பு ஆயித்தியமலை நரிப்புழுத்தோட்ட கிராம மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் குறை நிறைகள் தொர்பாக கலந்துரையாடினர்.
இக்கிராம மக்களின் மிக நீண்ட கால தேவையாகவிருந்த இக்கிராமத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றாக இருக்கின்ற நரிப்புழுத்தோட்ட ஆற்றினை ஊடறுத்து பாலம் ஒன்று அமைக்க வேண்டிய தேவையுள்ளமையினால் அப்பாலம் அமைய வேண்டிய ஆற்றுப் பகுதியை பார்வையிட்டார்.
இப்பாலம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை தான் செய்து கொண்டு இருப்பதாகவும், அண்மையில் பாரளமன்ற உரையில் இப்பாலத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி, நிதியமைச்சருக்கும் அறிக்கை சமர்ப்பித்திருந்ததாகவும், வெகு விரைவில் இதற்கான பணிகளை ஆரம்பித்துத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக