மட்டக்களப்பு தொப்பிகல வனப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 8 கிலோகிராம் மான் இறைச்சியையும் துவிச்சக்கரவண்டியையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள கிரான் பிராந்திய அதிகாரி எஸ்.ரி.சதுன் ஹேமநாயக்க தெரிவித்தார்.
குறித்த இறைச்சியும் துவிச்சக்கரவண்டியையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கைப்பற்றியதாகவும் அவற்றை இன்று திங்கட்கிழமை (14) நீதிமன்றத்தில் கையளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொப்பிகல வனப் பகுதியிலிருந்து, மான் இறைச்சி கொண்டு வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, மான் இறைச்சியுடன் துவிச்சக்கர வண்டியில் வந்த நபர், 8 கிலோகிராம் மான் இறைச்சியை அதேயிடத்தில் கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த இறைச்சியும் துவிச்சக்கரவண்டியையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கைப்பற்றியதாகவும் அவற்றை இன்று திங்கட்கிழமை (14) நீதிமன்றத்தில் கையளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொப்பிகல வனப் பகுதியிலிருந்து, மான் இறைச்சி கொண்டு வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, மான் இறைச்சியுடன் துவிச்சக்கர வண்டியில் வந்த நபர், 8 கிலோகிராம் மான் இறைச்சியை அதேயிடத்தில் கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக