
அரசடித்தீவு பழைய மாணவர்களால் அதிபர் கே.தியாகராசாதலைமையில் (04/12/2015) அன்று அரசடித்தீவு விக்கினேஷ்வராமகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலாம் வகுப்பு தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள சகல மாணவர்களுக்கும் புலம்பெயர் அமைப்பான "அவுஷ்திரேலியா தமிழ் தேசிய கூட்டமைப்பின் விக்ரோரியா கிளை" யால் அன்பளிப்பு செய்யப்பட்ட அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டது.
இந்தநிகழ்வில் பெற்றோர்கள் பலரும் பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர். அதிபர் தியாகராசா தலைமை ரையின் போது அவுஷ்திரேலியா தமிழ் தேசிய கூட்டமைப்பு கிளைக்கு நன்றி தெரிவித்ததுடன் அரசடித்தீவு விக்கினேஷ்வரா மகா வித்தியாலயம் எதிர்காலத்தில்
மாணவர்கள் எல்லாப் பரிட்சைகளிலும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு எனவும்தமது பணியானது மாணவர்களை ஒழுக்க விழுமியங்களுடன் கல்வியில் சாதனைபடைக்கும் மாணவர்களை உருவாக் குவதே எனவும் இதற்கு பெற்றோரும் பழய மாணவர்களும் தொடர்து எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டார்.
பழையமாணவர் சார்பில் உரையாற்றிய அழகிப்போடி கருணாகரன் அவுஷ்ரேலியா தமிழ் தேசிய கூட்டமைப்பு கிளை முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய இந்த அப்பியாச கொப்பிகளை வழங்கியதற்கு நன்றி கூறியதுடன் அரசடித்தீவுவிக்கினேஷ்வரா மகாவித்தியாலய அதிபர்
ஆசிரியர்களின் அற்பணிப்பு மிக்க செயல்பாட்டை பாராட்டினார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக