வியாழன், 17 செப்டம்பர், 2015

அவுஸ்திரேலிய அபிவிருத்திக் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் கிழக்கு முதல்வரை சந்தித்தார்

அவுஸ்திரேலிய அபிவிருத்திக் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை சம்பந்தமாகவும் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இதன் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை மேம்படுத்தவும் ஆராயப்பட்டுள்ளன.
குறைந்த சம்பளத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாளர்களாக தொழில் புரியும் இளைஞர் - யுவதிகள் சிரமப்படுவதனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் ஆகவே சுற்றுலாத்துறை பயிற்சிகள் மூலம் இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 15 மில்லியன் அவுஸ்ரேலியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இதனை 4 வருட செயற்றிட்டமாக செயற்படுத்தவிருப்பதாகவும், அவுஸ்ரேலிய அபிவிருத்தித் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் தெரிவித்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate