உலகலாவிய ரீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சர்வதேச எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
‘இன்றே பரிசோதனை செய்வோம்-செயற்படுவதற்கான நேரம் இதுவே’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
எயிட்ஸ் நோய் தொடர்பில் தெளிவூட்டல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, இலங்கையில் இதன் பிரதான வைபவம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
எயிட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்நாள் உலகளாவிய ரீதியில் அனைவராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
எயிட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கருவானது, முதலாவதாக 1988ஆம் ஆண்டு நடைபெற்ற எயிட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் உருவானது. அதன் பின்னர் அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
உலகில் காணப்படும் மிகவும் கொடிய தொற்றுநோய் எயிட்ஸ் காணப்படுகிறது. இது பற்றி நவீன மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தாலும், உலகலாவிய ரீதியில் இதன் பீடிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளன.
இலங்கையில் இந்நோயினால் வாராந்தம் நால்வர் பாதிக்கப்படுவதாகவும், வருடாந்தம் சுமார் 25 பேர் வரை உயிரிழப்பதாகவும், சுமார் 1800 பேர் வரை தமக்கு ஏற்பட்டுள்ள தொற்று குறித்து அறியாமல் உள்ளதாகவும் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசில் லியனகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒருவர் ஒரே நோயில் தொடர்ந்து பீடிக்கப்பட்டு அது குணமாகாமல் காணப்பட்டால் உடனே பரிசோதனை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக நம்பிக்கைக்குறிய ஒருவருடன் மாத்திரம் பாலுறவு வைத்துக்கொள்வதால் இந்நோய் தாக்கத்திலிருந்து முற்றாக விடுபடலாலாமென்பது பொதுவான எண்ணப்பாடாகும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக