செவ்வாய், 1 டிசம்பர், 2015

முனைக்காடு கிராமத்தில் நூலகத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசச் சபை பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில், நூலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றது. 

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 1,664,907.87 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த கட்டடத்துக்கான அடிக்கல்லை, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், பிரதேச சபையின் செயலாளர் கே. கிருஸ்ணபிள்ளை உட்பட சில அதிகாரிகளும் நாட்டி வைத்தனர். 

இந்தப் பிரதேசத்தின் நீண்ட காலக் குறையாகவிருந்த நூலக வசதி,  இதன் மூலம் நிவர்த்திக்கப்டும் என்று குறித்த பகுதியின் பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate