(லியோன் )
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு புகலிடம் நிறுவனம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக மட்டக்களப்பு புகலிடம் நிறுவன இயக்குனர் போதகர் டெரன்ஸ் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் இடம்பெற்றது .
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்ற வேளையில் அதனை கண்டிக்கும் வகையிளும் அதேவேளை நல்லதொரு சமூகத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் இன்றையநாள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு, பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலமும் , வீதி நாடகங்களும் இடம்பெற்றன .
இன்று இடம்பெற்ற இவ்விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் பெண்கள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர் .
0 facebook-blogger:
கருத்துரையிடுக