திங்கள், 7 டிசம்பர், 2015

வீடொன்றுக்குள் புகுந்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூவர் காயம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி பிரசேத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
நேற்றிரவுரவு ஆரையம்பதி பிரசேத்தின் அமரசிங்கம்வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இதனால் காயமடைந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த தாக்குதலில் கே.சந்திரகுமார்(56), எஸ்.பரமேஸ்வரி(46), எஸ்.புவி (20) ஆகியோரே காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்குள்ளானவர்கள் மீது ஏற்கனவே சிலரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆரையம்பதி பிரசேத்திலுள்ள அரசியல்வாதியொருவரின் சகாக்களே இந்த தாக்குதலை
நடாத்தியதாகவும் அவர்களே தொடர்ந்து தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate