வெள்ளி, 18 டிசம்பர், 2015

சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்க முயற்சிக்கும் ஜப்பான்

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சம்பூரில் ஜப்பான் நிறுவனம் ஒன்று அனல்மின் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பூரில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மீள்குடியேற்ற பகுதியான 818 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து 515 ஏக்கர் பகுதியை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் நிறுவனம் கோரிக்கை முன் வைத்துள்ள பகுதி மக்களின் வயல் காணிகள் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியாவின் அனல்மின் நிலையத்தை சம்பூரிலிருந்து மாற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சம்பூரில் மின் நிலையத்தை அமைப்பதற்கு ஜப்பான் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் மீண்டுமொரு அனல் மின்நிலையம் தமது பகுதியில் வருவதற்கு அனுமதிக்கபோவதில்லை என மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate