(லியோன்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதிரி வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராசா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில்இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் மட்டக்களப்பு மத்திய வலயத்தின்கீழ் இயங்கும் கல்லடி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நகர் புற மாதிரிவீட்டுத்தோட்ட பயிர்செய்கை திட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாக பல விரிவாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது .
இதன் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி செயல்திட்டத்தின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதிரி வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான கருத்தரங்கு இன்று இடம்பெற்றது .
இடம்பெற்ற கருத்தரங்கு நிகழ்வில் வளவாளராக கல்லடி விவசாயபோதனாசிரியர் திருமதி தெய்வமனோஹாரி கலந்துகொண்டார் .
இந்த நிகழ்வின் போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம்வழங்கப்பட்டும் கொடுப்பனவுகளும் மற்றும் மாதிரி வீட்டுதோட்டதிற்கான மரக்கன்றுகளும் , விதைநாற்றுகளும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி பருவஅபிவிருத்தி உத்தியோகத்தர் . டி . மேகராஜ் , முன்பள்ளி அபிவிருத்தி உதவி கல்விபணிப்பாளர் எம் . புவிராஜ் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
0 facebook-blogger:
கருத்துரையிடுக