செவ்வாய், 8 டிசம்பர், 2015

மறைந்த தமிழ் நவீன நாடகங்களின் பிதாமகன் பேராசிரியர் சோ.ராமானுஜமுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

இந்தியாவின் தமிழ் நாட்டில் நேற்று மறைந்த நவீன நாடகத்தின் பிதாமகன் எனப்போற்றப்படும் பேராசிரியர் சோ.ராமானுஜமுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடமும் மட்டக்களப்பு கல்வி வலய அழகில் கற்கைகள் பிரிவும் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வினை இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பாடுசெய்திருந்தது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தின் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுருவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மாணவர்களினால் மெழுகு திரி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பேராசிரியர் சோ.ராமானுஜம் உருவப்படத்துக்கு மட்டக்களப்பு கல்வி வலய அழகியல் கற்கைகள் பிரிவு பணிப்பாளர் ஜெயஸ்ரீபவனால் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் நடனநாடகத்துறை தலைவர் திருமதி ஜெயரஞ்சனி,விரிவுரையாளர்களான விவேகாந்தராஜா,மோனதாஸ்,உமா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் நாடகத்துறையில் நவீன நாடகத்துறையில் அமரர் பேராசிரியர் சோ.ராமானுஜம் ஆற்றிய பணி தொடர்பில் நினைவுகூரப்பட்டது.





















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate