வியாழன், 10 டிசம்பர், 2015

புதுக்குடியிருப்பில் சேதனப் பசளைவிற்பனை நிலையம் திறந்து வைப்பு.


 - ஜெயஹரி -
மண்முளைப்பற்றுப் பிரதேச சபை யுனொப்ஸ் நிறுவனத்தினருடன் இணைந்து கடந்த இரண்டு வருடங்களாக நடைமுறைப்படுத்திவரும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் மூலம் சேதனப் பசளை தயாரிக்கும் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட சேதனப் பசளைகளை விற்பனை செய்வதற்காக இன்று மண்முளைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு உப அலுவலக வளாகத்தில் உள்ள கடைத்தொகுதியில் மண்முனைப் பற்று ,ஆரையம்பதி பிரதேசசபையின் செயலாளர் திருமதி கா.ஜெ.அருள்பிரகாசம் அவர்களின் தலைமையில் சேதனப் பசளைவிற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யுனொப்ஸ் நிறுவத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்ட நிருவாக அதிகாரி சிவா மற்றும் சமூக விழிப்புணர்வு நெறியாளர் குமார், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஜீவன் மற்றும் மண்முளைப்பற்று பிரதேசசபையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சதாசிவம் உற்பட பொது மக்கள் பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் பிரதேசசபையின் செயலாளர் உரையாற்றுகையில் மண்முனைப்பற்று பிரதேசசபை யுனொப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப் பகுதி பொதுமக்ளின் ஒத்துளைப்புடன்  எமது உத்தியோகத்தர்கர் ,ஊழியர்களின் திறமையான செயலாற்றலில் இத் திட்டத்தில் இன்று வெற்றி பெற்றுள்ளதாகவும் இச் செயற்பாடுகளின் பிரதிபலனால் இன்று திறக்கப்பட்டிருக்கும் இவ் விற்பனை நிலையம்  வார நாட்களில் காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.30 மணி வரையில் திறந்திருக்கும் இவ் விற்பனை நிலையத்தில் சேதனப்பசளைகளை கொள்வனவு செய்து  பயன்படுத்துவதன் மூலம் எமது பிரதேசத்தினை நோயற்ற ஆரோக்கியமான மக்கள் வாழும் பிரதேசமாக மாற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.












Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate