வியாழன், 17 டிசம்பர், 2015

சிரேஸ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் கவியருவி விருது வழங்கி கௌரவிப்பு

மலேசிய எழுத்தாளர் சங்கமும், கனேடிய படைப்பாளிகள் உலகமும் தடாகம் கலை இலக்கிய வட்டத்துடன் இணைந்து கலை இலக்கிய துறைகளில் பங்களிப்புச் செய்த இலங்கை மற்றும் மலேசியா, கனடா ஆகிய நாடுகளைச்சேர்ந்த 46 படைப்பாளிகளுக்கு  விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.


திருகோணமலை சண்சைன் மண்டபத்தில் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தலைமயில் நடைபெற்ற வைபவத்தில் மலேசியா மற்றும் கனேடிய நாட்டு படைப்பாளிகளும் பங்கு கொண்டனர்.

இவ்விருது விழாவில் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும்   ரீ.எல்.ஜவ்பர்கான் கவியருவி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவ்விழாவில் கனேடிய படைப்பாளிகள் உலக தலைவர் கவிஞர் ஐங்கரன் ,மலேசிய எழுத்தாளர் சங்க தலைவர் கவிஞர் ராஜேந்திரன் உட்பட பெரும் எண்ணிக்கையிலான படைப்பாளிகள் கலைஞர்களும்  கலந்து கொணடனர்;.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate