செவ்வாய், 8 டிசம்பர், 2015

செங்கலடி Teeny weeny kidzzy world ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற ஒளிவிழா!

செங்கலடியில் அமைந்திருக்கும் Teeny weeny kidzzy world Montessori  இல் கடந்த வெள்ளிக்கிழமை (27) ஒளி விழா நிகழ்வும் 2016ம் ஆண்டு ஆரம்பக் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.



இந்நிகழ்வானது பாடசாலையின் இணைப்பாளர் திருமதி. சயமினி ரஜிதா ஜெயவீரசிங்கம் மற்றும் பாடசாலை அதிபர் திருமதி. ஐரீன் ஜெசிந்தா போல் ஆசிரியர்களான திருமதி. கில்னா ராகல், திருமதி. அரவிந்தன் தமயந்தி தலைமையில் இடம்பெற்றது.




பிரதம அதிதியாக கல்குடா முன்பிள்ளைப் பருவ கல்வி இணைப்பாளர் மு.ஜெயவதணன் மற்றும் அதிதிகளாக அருட்தந்தை. திருச்செல்வம், முன்பள்ளிக் கல்வி கள உத்தியோகத்தர் ஏ.கயல்விழி, பிரதேச சபை செயலாளர் திருமதி. ஜோன்பிள்ளை மற்றும் திருமதி. பாலசுப்பிரமணியம், கிராம உத்தியோகத்தர்  கனகரட்ணம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
நடைபெற்ற நிகழ்வின்போது அதிதிகள் வரவேற்க்கப்பட்டதும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate