செவ்வாய், 1 டிசம்பர், 2015

கிழக்கு பல்கலையில் ஊடகவியலாளரை அச்சுறுத்திய சிங்கள மாணவர்கள்!

மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை சிங்கள மாணவர்கள் சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (31) திங்கள்கிழமை  மதியம் நடைபெற்ற சிங்கள மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைகழக உபவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை புகைப்படம் எடுத்த குறித்த ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.



ஊடகவியலாளர்களை சூழ்ந்து கொண்ட சில சிங்கள மாணவர்கள் அடையாள அட்டையை காட்டுமாறு கூறி அச்சுறுத்தியுள்ளனர். குறித்த ஊடகவியலாளர் தன்னிடம் அடையாள அட்டை இல்லை என்று கூறிய போது அடையாள அட்டை இன்றி ஏன் வந்தாய் நீயார் எனக் கூறி ஊடகவியலாளரிடம் அடையாள அட்டையை காட்டுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.



அடையாள அட்டையை கேட்ட மாணவர்களிடம் நீங்கள் யார் உங்களிடம் ஏன் அடையாள அட்டை காட்டவேண்டுமென ஊடகவியலாளர் கேட்டபோது, அதற்கு குறித்த சிங்கள மாணவர்கள் தகராரில் ஈடுபட முயன்றமையினால், நிலைமையை சமாளிப்பதற்காக அடையாள அட்டையை காட்டிவிட்டு ஊடகவியலாளர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சம்பவ இடத்தில் பொலிசார் பல்கலைகழக நிர்வாகம் மற்றும் புலனாய்வுத் துறையினர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624941

Translate