மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேசத்தில் கஞ்சாவை முச்சக்கரவண்டியில் கொண்டுசென்றதாகக் கூறப்படும் அம்முச்சக்கரவண்டிச் சாரதி இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 10 கஞ்சாக் கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி -பதுளை வீதி வழியாக கரடியனாறுப் பிரதேசத்துக்கு 33,000 மில்லிகிராம் நிறையுடைய 10 கஞ்சாக் கட்டுக்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்தமை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலைத் தொடர்ந்து, குறித்த முச்சக்கரவண்டியைச் சோதனையிட்டபோது கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
செங்கலடி -பதுளை வீதி வழியாக கரடியனாறுப் பிரதேசத்துக்கு 33,000 மில்லிகிராம் நிறையுடைய 10 கஞ்சாக் கட்டுக்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்தமை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலைத் தொடர்ந்து, குறித்த முச்சக்கரவண்டியைச் சோதனையிட்டபோது கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக