செவ்வாய், 1 டிசம்பர், 2015

2ம் திகதி முதல் கா.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை


இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செமினார், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 2ம் திகதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி 2ம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 17ம் திகதி வரை இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ் வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு டிசம்பர் 17ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate