தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஆகியோரை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் போதிய வளங்கள் இல்லை எனத் தெரிவித்து, அந்த பீடத்தை மூடி விட்டு தம்மை வேறு பல்கலைக்கலகங்களுக்கு இடமாற்றுமாறு கோரி மாணவர்கள் வகுப்புகளை பகிஷ்கரித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்தே அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கூட்டாக இவ்விடயத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது தென்கிழக்கு பலகலையின் பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது எனவும் குறித்த பிரச்சினை சுமூகமாக தீர்த்து வைக்கப்படும் எனவும் அங்கு நிலவும் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு சகல வசதிகளும் கொண்டதாக அப்பீடம் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார் என பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக