சனி, 19 டிசம்பர், 2015

கிழக்கில் ஆடைத் தொழிற்சாலைகள்

ஒவ்வொன்றிலும் 5000 வேலை வாய்ப்புக்கள் 
கிழக்கு மாகாணத்தில் அனைத்து உள்ளூராட்சி பிரதேசங்களிலும் ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்து ஒவ்வொன்றிலும் 5000 வேலை வாய்ப்புக்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதல்வர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் திருகோணமலையில் சர்வதேச விமான நிலையமொன்றையும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளூர் விமான நிலையங்களை  ஆரம்பிக்கவும் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த முதலமைச்சர், வாகரை தொடக்கம் மட்டக்களப்பு வரையிலான பிரதேசத்தை சுற்றுலா வலயமாக்கி 100 ஏக்கர் காணியில் 'கொல்ப்' விளையாட்டுத் திடலொன்றை நிர்மாணிக்கும் பிரதமரின் திட்டத்தையும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இரண்டாவது முதலீட்டுத் திட்டம் தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் தலைமையில் கொழும்பு உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த முதலமைச்சர், கிழக்கு மாகாணத்தில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன. அதில் திருகோணமலை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்குவதே எனது திட்டமாகும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை விமான நிலையங்கள் உள்ளூர் விமான சேவை நிலையங்களாக்கப்படும்.
சாதாரண கட்டணத்தில் சுமார் 4000 ரூபாவை அறவிடும் கையில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியும். இது தொடர்பான எனது திட்டத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளேன்.
அதேபோன்று கிழக்கில் வாகரையிலிருந்து மட்டக்களப்பு வரையிலான பிரதேசத்தை சுற்றுலா வலயமாக மாற்றி அபிவிருத்தி செய்வதும் எமது திட்டமாகும். இத்திட்டம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் முன்வைக்கப்பட்ட திட்டமாகும்.
இத்திட்டத்தில் வாழைச்சேனை கடதாசி ஆலை பிரதேசத்தை கொல்ப் விளையாட்டுத் திடலாக மாற்றுவதும் இடம்பெறவுள்ளது. 150 ஏக்கரில் இது அமையவுள்ளது.
450 ஏக்கர் நிலப் பரப்பைக் கொண்ட இப் பிரதேசத்தில் 100 ஏக்கரில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைத்து தொழில்வாய்ப்புக்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை மூடப்படுமா என முதலமைச்சரிடம் கேட்ட போது, சம்பளம் வழங்கவே முடியாத நிலையில் இயங்கும் அந்த தொழிற்சாலை மூடப்படும், அதற்குப் பதிலாக கைத்தொழில் பேட்டை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் பிரசித்திபெற்ற திருக்ணேஸ்வர திருப்பதியைத் தரிசித்க்க வரும் இலட்சக்கணக்கான இந்திய யாத்திரிகர்களுக்கும் திருமலையில் அமைக்கப்படும் சர்வதேச விமான நிலையம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதைக் கருத்திக் கொண்டே அதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate