மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழு நடாத்தும் ஐயப்ப மண்டலப் பெருவிழா மட்டக்களப்பு மாமாங்கம் திருத்தொண்டர் சபை மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
காலை கணபதி ஹோமம், அபிஷேகப் பூசை மற்றும் பிரதான பூசைகள் இடம்பெற்றது. அத்தோடு இலங்கையில் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொள்ளும் ஐயப்ப சுவாமிமார்களினால் பெரியளவிலான பஜனை இடம்பெற்றது.
பூசைகள் யாவும் நாவலடி காயத்திரி ஆலய பிரதமகுரு சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ.சாம்பசிவம் சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார் சிவஸ்ரீ.கு.உதயகுமாரக் குருக்கள் ஆகியோரினால் இடம்பெற்றது.
ஐயப்ப பூசைகளின் ஐநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் அருளைப் பெற்றுக் கொண்டதுடன். பூசைகள் யாவும் நிறைவு பெற்றதும் ஏற்பாட்டுக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக