வியாழன், 17 டிசம்பர், 2015

மொழி பிரச்சினைக்கு தீர்வை வழங்கினார் வியாழேந்திரன்

மொழிகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மொழி வளத்தை மேம்படுத்துவதற்கும் மொழி பெயர்ப்பு சபையொன்றை ஸ்தாபித்தல் அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மொழி ரீதியான பிரச்சினையே, இன பிரச்சினைக்கு வித்திட்டமையை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், அவ்வாறான ஒரு நிலை மீண்டும் உருவாகுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ் மொழி, ஏட்டில் மாத்திரமே காணப்படுவதாகவும், அது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களிலும் பாரிய தமிழ் பிழைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனியார் துறை நிறுவனங்களில் தமிழ் பிழைகள் மிக குறைவாக காணப்படுவதாகவும், அரச நிறுவனங்களிலேயே அதிகளவிலான தமிழ் பிழைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமது கடமைகளை தாய்மொழியிலேயே செய்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தினார்.
சிங்களமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் தாய்மொழி கட்டாயமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.
அதேபோன்று, மொழியும், சமயமும் கட்டாயமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பாராளுமன்றத்தில் இன்று கூறினார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate