(ராஜ்)
பாடசாலை கல்வியை பூர்த்திசெய்யும் இளைஞர் யுவதிகள் நல்ல தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் தாய்தந்தையர்களைப்போன்று உரிய வழியைக்காட்டுவதற்கான கடமை சமூகத்தில் உள்ள அனைவருக்கும் உள்ளது என மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் ரொட்டறிக்கழகத்தின் சமூக சேவைகள் பணிப்பாளருமான வி.தவராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் பாடசாலை கல்வியை நிறைவுசெய்தவர்களுக்கான தொழில் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்பயிற்சிகள் தொடர்பிலான அறிட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகமும் இணைந்து இந்த நிகழ்வினை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் இந்த நிகழ்வினை நடாத்தியது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் ரொட்டறிக்கழகத்தின் சமூக சேவைகள் பணிப்பாளருமான வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரொட்டறிக்கழகத்தின் தலைவர் எஸ்.சிவரூபன்,திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.சிவகுமார்,தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சலீம் மௌலானா,வூஸ்சின் சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் ரி.ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலை கல்வியை நிறைவுசெய்த பெருமளவான இளைஞர் யுவதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது தொழில் ஒன்றைப்பெற்றுக்கொள்வதற்காக கற்கவேண்டிய கற்கை நெறிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பினைபெறக்கூடிய கற்கைநெறிகள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
வூஸ் அமைப்பின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட இந்த விழிப்பூட்டும் நிகழ்வில் தொழில்சார் கற்கைளை வழங்கும் கல்லூரிகள், நிறுவனங்கள்,பல்கலைக்கழங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இன்று இளைஞர் யுவதிகள் மத்தியில் உள்ள கையடக்க தொலைபேசி பாவனை அவர்களின் பாதையினை மாற்றியமைப்பதாகவும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் ரொட்டறிக்கழகத்தின் சமூக சேவைகள் பணிப்பாளருமான வி.தவராஜா இங்கு தெரிவித்தார்.
பாடசாலை கல்வியை பூர்த்திசெய்யும் இளைஞர் யுவதிகள் நல்ல தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் தாய்தந்தையர்களைப்போன்று உரிய வழியைக்காட்டுவதற்கான கடமை சமூகத்தில் உள்ள அனைவருக்கும் உள்ளது என மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் ரொட்டறிக்கழகத்தின் சமூக சேவைகள் பணிப்பாளருமான வி.தவராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் பாடசாலை கல்வியை நிறைவுசெய்தவர்களுக்கான தொழில் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்பயிற்சிகள் தொடர்பிலான அறிட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகமும் இணைந்து இந்த நிகழ்வினை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் இந்த நிகழ்வினை நடாத்தியது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் ரொட்டறிக்கழகத்தின் சமூக சேவைகள் பணிப்பாளருமான வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரொட்டறிக்கழகத்தின் தலைவர் எஸ்.சிவரூபன்,திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.சிவகுமார்,தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சலீம் மௌலானா,வூஸ்சின் சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் ரி.ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலை கல்வியை நிறைவுசெய்த பெருமளவான இளைஞர் யுவதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது தொழில் ஒன்றைப்பெற்றுக்கொள்வதற்காக கற்கவேண்டிய கற்கை நெறிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பினைபெறக்கூடிய கற்கைநெறிகள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
வூஸ் அமைப்பின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட இந்த விழிப்பூட்டும் நிகழ்வில் தொழில்சார் கற்கைளை வழங்கும் கல்லூரிகள், நிறுவனங்கள்,பல்கலைக்கழங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இன்று இளைஞர் யுவதிகள் மத்தியில் உள்ள கையடக்க தொலைபேசி பாவனை அவர்களின் பாதையினை மாற்றியமைப்பதாகவும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் ரொட்டறிக்கழகத்தின் சமூக சேவைகள் பணிப்பாளருமான வி.தவராஜா இங்கு தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக