தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (09.10.2015) வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் கே.கதிர்காமநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கோறளைப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி என்;.குணலிங்கம், பேத்தாளை விபுலானந்தா வித்தியால அதிபர் ரீ.சந்திரலிங்கம் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஆறு மாணவர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து கொள்முதல் செய்த துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
இந்தப் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீசன் கர்ஜிதன் 190 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் கல்குடா வலய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றுத்தந்து தனது பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார்.
வித்தியாலய அதிபர் கே.கதிர்காமநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கோறளைப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி என்;.குணலிங்கம், பேத்தாளை விபுலானந்தா வித்தியால அதிபர் ரீ.சந்திரலிங்கம் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஆறு மாணவர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து கொள்முதல் செய்த துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
இந்தப் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீசன் கர்ஜிதன் 190 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் கல்குடா வலய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றுத்தந்து தனது பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக