செவ்வாய், 8 டிசம்பர், 2015

மட்டக்களப்பில் பிரபல சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளை –ஒருவர் கைது

மட்டக்களப்பின் பிரபல சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை வீட்டின் ஜன்னல்கள் வழியாக உள் நுழைந்து அலுமாரியில் இருந்த சுமார் பத்து பவுன் தங்க நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த கொள்ளைச்சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate