புதன், 9 டிசம்பர், 2015

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பிற்கெதிராக மக்கள் மறியல் போராட்டம்


மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில் காணிகள் திட்டமிட்டு பொலிசாரின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டுவருவதை கண்டித்து பிரதேசவாசிகள் இன்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான வாயிலின் முன்னால் மறியல் பேராட்டத்தில் ஈ;டுபட்டனர். 


குறித்த கிராமத்திலிருந்து பஸ் வண்டிமூலம் மாவட்ட செயலகத்திற்கு வந்த கிராமவாசிகளை பொலிஸார் மாவட்ட செயலகத்தினுள் செல்லவிடாது தடுத்தனர். 



இருப்பினும் பொலிஸார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தமையால் அரசாங்க அதிபரை சந்திக்க சந்தர்பபம் தருமாறு கோரி வெளியில் நின்று மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



பொலிசாரின் உதவியுடன் தங்களது காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் அவற்றை தடுத்து நிறுத்துமாறு கோரியுமே இப்போராட்டம் நடாத்தப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர். 



மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு பெரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate