சனி, 19 டிசம்பர், 2015

கொக்கட்டிச்சோலையில் மாடுகளை திருடியவர் கைது -மூன்று மாடுகளும் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடுகளை கொள்ளையிட்டு வந்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலேயே ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் மூன்று மாடுகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் களுவாஞ்சிகுடி பதில் நீதவான் கே.பிரேம்நாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது 14 தினங்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate