இந்த வீதி செப்பனிடலானது முறையற்ற விதத்தில் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்வீதியின் பள்ளங்களுக்கும், குழிகளுக்கும் கற்களை போட்டு தார் போட்டு செப்பனிடும் போது முறையற்ற விதத்திலும் மழைபெய்து ஓய்ந்தவுடன் தார் இடுவதாகவும் நேரில் பார்த்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு செப்பனிடப்படும் பள்ளங்கள், குழிகள் ஒழுங்கற்ற முறையில் நிரப்பப்படுவதாகவும், அப்பள்ளங்கள் சீர்செய்யாமல் ஒழுங்ககாக அதனுள் உள்ள மண், தூசிகள் அகற்றாமல் ஈரலிப்புடன் வைக்து கற்கள் மற்றும் தார் ஊற்றுவதனால் அது உறுதியாக அமையாததன் காரணமாக அதன் மீது பார ஊர்திகள் செல்லும் போது அவை மீண்டும் சிதைவடைகின்றது.
பொருத்தமற்ற முறையில் பழுகாமம் வைத்தியசாலைக்கு முன்னால் கொங்கீறிட் பாதை போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது ஒரு கண்துடைப்பு செயலா? மக்கள் கேள்வி.
0 facebook-blogger:
கருத்துரையிடுக