இலங்கைக்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவத் தலைமைத் தளபதி தல்பிர் சிங் இன்று (02) காலை 7.30 மணியளவில் தனது மனைவியுடன் வருகை தந்து திருகோணமலை கோணேஸ்வரா ஆலயத்தில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இவர் 1987 தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரை இந்திய கனிஷ்ட அதிகாரியாக கடமையாற்றியவர் எனவும் தெரிய வருகின்றது.
இந்தப் பூஜை வழிபாட்டில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவத் தளபதி ஜனக வெல்கம -திருகோணமலை 22 ஆவது கட்டளைத் தளபதி குமுது பெரேரா மற்றும் இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக