செவ்வாய், 15 டிசம்பர், 2015

மட்டக்களப்பு நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வு (Photos)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக சிறுவர்களை மையப்படுத்திய குடும்ப அவிருத்தி திட்ட அமைப்பான நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் வருடாந்த ஒளி விழாவும் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (15) குறித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் திருமதி.ரஞ்சினி மதிதரன் தலைமையில் தாண்டவன்வெளி வை.எம்.சி.ஏ பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. 


நடைபெற்ற நிகழ்வுக்கு மட்டக்களப்பு செயலக உதவித்திட்ட பணிப்பாளர் எஸ்.சுதர்சன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சா.அருள்மொழி, நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் நிருவாகசபை உறுப்பினர் செ.அருமைநாயகம் அத்துடன் மாவட்டத்தில் சாதனைபடைத்த மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தர்.


இந் நிகழ்வில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் அத்துடன் கலை நிகழ்வுகளை தொடர்ந்து தரம் 5 புலமைப் பரிசில் சித்தி எய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, 2014ம் கல்வி பொது சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தல், பல்கலைக்கழக தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவித்தல், கல்வியல் கல்லூரியில் அனுமதி பெற்ற மாணவர்களை கௌரவித்தல், ஏனைய தொழில் பயிற்சி பெறும் மாணவர்களை கௌரவித்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நம்பிக்கையின் ஏணி (எல்.ஓ.எச்) நிறுவனமானது மாவட்டத்தில் கல்வியின் பால் நலிவடைந்து காணப்படும் சிறுவர்களை இனம் கண்டு அவர்களை மேன்மேலும் கல்வி ஊடாக முன்னேற்றமடையும் செயற்பாடுகளையும் அதன்பால் பல உதவித்திட்டங்களையும் கடந்த காலங்களில் இருந்து வழங்கிவருக்கினமை குறிப்பிடத்தக்கது.






















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate