சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனைக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சூர்யா மகளீர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை பெண்னெருவருக்கு கல்லெறிந்து கொலைசெய்யுமாறு சவூதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், குறித்த பெண்ணின் மரண தண்டனைக் கெதிரான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டங்கள் மேற் கொள்ளப்பட்டன.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் விழிப்பூட்டும் துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.
பெண்களின் வாழ்வு மற்றும் தொழில் செய்யும் உரிமைகளை சவூதி அரசு மறுப்பதாகவும், இவற்றிற்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக