திங்கள், 14 டிசம்பர், 2015

மட்டக்களப்பு வொய்ஸ் ஒவ் மீடியாவில் அறிவிப்பாளர் பயிற்சி செயலமர்வு!

கிழக்கு மாகாணத்தில் ஊடக கற்கை நெறியை மேற்கொண்டு வரும் வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம் அறிவிப்புத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அறிவிப்புத்துறையில் ஈடுபடுபவர்களுக்கான அறிவிப்பாளர் பயிற்சி செயலமர்வு ஒன்றை மட்டக்களப்பில் நடாத்தவுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சியின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமாகிய ஏ. ஆர். எம் ஜிப்றி இச்செயலமர்வில் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளார். 

எதிர்வரும் 19ஆம்திகதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இச்செயலமர்வு நடைபெறவுள்ளது.

உணவு, கையேடுகள் மற்றும் சான்றிதழ் என்பனவும் இச்செயலமர்வில் வழங்கப்படவுள்ளன. 

இந்த அறிவிப்பாளர் பயிற்சி செயலமர்விற்கு பங்குபற்ற விரும்புபவர்கள் 0652222832 அல்லது 0758265824 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தமது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். முற்பதிவு செய்தவர்களே செயலமர்விற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதேவேளை அடுத்தவருடம் ஜனவரிமாத முற்பகுதியில் அறிவிப்பாளர் பயிற்சிக்கென புதிய டிப்ளோமா வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆர்வமுள்ளவர்களை இம்மாத இறுதிக்குள் பதிவுசெய்து கொள்ளுமாறும் வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்தின் இணைப்பாளர் ப்ரியா சிவமோகன் தெரிவித்துள்ளார். 




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate