(BNN நிருபர் மயுரன்) கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்த 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கார்லோட்டே ப்ளண்டெல் தெரிவித்தார்.
இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டை சந்தித்து பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, தற்போதைய நிலைமைகளை கேட்டறிந்த உயர்ஸ்தானிகர், சட்ட ரீதியற்ற முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையும் இலங்கையர்களை தடுப்பதில் பாரிய பங்குளிப்பு செய்த இலங்கை பொலிஸாருக்கும் நன்றி தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக