சனி, 31 அக்டோபர், 2015

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

கந்தளாய் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் மரணமடைந்தவர் ஏ.எம்.நஜீப் (சவுக்கத்தலி) எனும் 44 வயதுடைய ஒருவர் எனவும் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது. 

இவர் கந்தளாய் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற போது, காட்டு யானைகள் இவரை சூழ்ந்து தாக்கியுள்ளன. 

இதனால் படுகாயமடைந்த அவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate