புதன், 28 அக்டோபர், 2015

இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்


எதிர்வரும் 7.11.2015 அன்று நடைபெறவுள்ள, இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுப் பத்திரங்களை வேட்பாளாகள் இன்று புதன்கிழமை காலை தொடக்கம் நண்பகள் வரை தாக்கல் செய்தனர். 


மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் வேட்புமனுப் பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று இடம் பெற்றதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் தெரிவித்தார். 



இந்த வேட்புமனுப்பத்திரங்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை புதன்கிழமை நண்பகள் 12 மணியுடன் நிறைவு பெற்றுள்ளன. 



எதிர் வரும் நவம்பர் மாதம் 7ம் திகதி இதற்கான தேர்தல் நாடுபூராகவும் நடைபெறவுள்ளன. 



225 பேரைக் கொண்ட இந்த இளைஞர் பாராளுமன்றத்தில் நாடுபூராவும் உள்ள 160 தொகுதிகளில் இருந்தும் 160 பேரும், ஏனையோர் போனஸ் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate