புதன், 28 அக்டோபர், 2015

ஆரையம்பதியில் வாசிகசாலை திறந்து வைப்பு.


ஜெயஹரி
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச சபையினால் கடந்த  (26) திங்கட்கிழமை ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கில் உள்ள நிலாமதி சனசமூக நிலைய கட்டிடத்தில் பொது வாசிகசாலை திறந்துவைக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி கா.ஜெ அருள்பிரகாசம் தலைமையில் இவ்வாசிகசாலை திறப்புவிழா நடைபெற்றது.

கொட்டும் மழையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் க.சித்திரவேல் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மண்முனைப்பற்று சனசமூக உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் பிரதேசசபை ஊழியர்கள் நிலாமதி சனசமூகநிலைய உறுப்பினர்கள் உட்பட சக்தி இளைஞர் கழகத்தினர் பொதுமக்கள் பலரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate