சமுதாயத்தின் வாழ்தலுக்கான விழிப்பை ஊட்டும் காத்திரமான திரைப்படங்கள் வெளிவருவதும் அவற்றைப் பார்வையிட்டு கலந்துரையாடுவதும் அது சார்ந்து சமூக மற்றும் கலைத்துவச் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும்.
இந்த வகையில் கிழக்குப்பல்கலையின் நுண்கலைத்துறையினர் சமகால சமுதாயத் தின் தேவைக்கும் அதற்கான சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டும் திரைப்படங்களை காட்சிப்படுத்துவதும் கலந்துரையாடுவதும், வர்த்தகச் சினிமாவால் சமுதாயத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றி கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் வழமை.
இதன் தொடர்ச்சியாக 2014 இல் இலங்கை நோர்வே தூதரகத்தினூடாக 24 அரிதான தும் அதிமுக்கியமான திரைப் படங்கள், ஆவணப்படங்கள், கதைப்படங்கள் என்பன இப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பில் ஒரு வருட காலமாக நடைபெற்றது. இதில் திரைப்பட நெறியாளர்கள், விற்பன்னர்கள் எனப் பலர் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து கலந்துகொண்டனர். சினிமா மற்றும் மாற்றுச் சினி மாவின் தேவை அதன் பெறுமதி அது மக்களை விழிப்படைய வைக்கும் முறை என்பன தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதன் அடுத்த கட்டமாக, 2015 க்கான ஐரோப்பிய திரைப்பட விழா நுண்கலைத்து றையின் ஒழுங்கமைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக, விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பிரதான மண்டபத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் மூன்று திரைப் படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இன்று The Black Brothers, Chair of Happens, The Theory of Every Thing ஆகிய மூன்று படங்களும் நாளை We are young, We are strong Morgen, Grand central ஆகிய மூன்று படங்களும் திரையிடப்படவுள்ளன. இது காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடையும். இதற்கான அதுமதி இலவசம்.
இப்படங்களைப் பார்வையிடுதல், கலந்துரையாடுதல், சமகால சமூக விடயங்களுடன் தொடர்புபடுத்தல் என்பன தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்தலுக்கான திரைப்பட விழாவாக இது அமைகின்றது. இதற்கான இணைப்பாக்கத்தை நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெய சங்கர் முன்னெடுக்கின்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக