வெள்ளி, 30 அக்டோபர், 2015

வானிலை முன்னறிவிப்பு, சபாலா சூறாவளி

 30.10.2015ம் திகதி மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு.

இலங்கையின் மேற்குத் திசையில் காணப்பட்ட வளிமண்டலக் குழப்பமானது இலங்கையைவிட்டு அப்பால் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் மழை காணப்படும். பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று சற்றுப் பலமானதாக வீசும். பொதுமக்கள் இடிமின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.

சபாலா சூறாவளி

கடந்த சில தினங்களாக அராபியக்கடல் பகுதியில் தோன்றியிருந்த தாழமுக்க வலயமானது படிப்படியாக வலுவடைந்து, தற்போது மிகமிக வலுவான சூறாவளியாக (Extremely Severe Cyclonic storm) உருவெடுத்துள்ளது. 

இதற்கு சபாலா (Chapala) என பெயரிடப்பட்டுள்ளது. இன்று (2015.10.30) செய்யப்பட்ட அவதானிப்பின் போது, இந்த சபாலா சூறாவளியானது மணித்தியாலத்திற்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது தற்போது இந்திய மும்பை நகரிலிருந்து மேற்கு-தென்மேற்காக 1390 கிலோமீற்றர் தூரத்திலும் ஓமான் நாட்டின் சலலா  பிராந்தியத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 780 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது. 

இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, மிகமிக வலுவான சூறாவளியாக உருவெடுத்து. வட ஜெமென் நாட்டிற்கும் ஓமான் நாட்டிற்கும் இடையே எதிர்வரும் நொவெம்பர் 02ம் திகதி நள்ளிரவு ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடல் பிரதேசத்திலிருந்து நிலப்பிரதேசத்திற்குள் நுளைந்தபின் இதன் வேகம் படிப்படியாகக் குறைவடையும். சூறாவளிக் காற்றின் வேகமானது மணிக்கு 115 கிலோமீற்றர் முதல் 135 கிலோமீற்றர் வரை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேச வளிமண்டல அமுக்கமானது 988 ஹெக்கர் பஸ்கல் (988ர்pய) ஆக காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.


க.சூரியகுமாரன்,

வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate