செவ்வாய், 27 அக்டோபர், 2015

ஊடகத்தில் செய்தி வெளியிட்டமையினால் தீர்வு கிடையாது. என்று கூறிய நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள்.

(கழுகு) 

மட்டக்களப்பு திக்கோடை 40ம் கிராமம் 4ம் வட்டார பிரதான வீதி கடந்த  5 வருடங்களாக மழை காலங்களில் சேதமடைவதும் பின்னர்  அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து  புனரமைப்பு செய்வது வழக்கம். இருந்த போதிலும்  2014.11.25 காலப்பகுதிகளில் பெய்த அடைமழையினால் முற்றாக சேதமடைந்தது. 

இது தொடர்பில் நவகிரி நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட  நீர்ப்பாசன பணிப்பாளர் (DD) போன்ற உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் இதற்கான நிரந்தர தீர்வினை பெற்றுத்தரவில்லை.

இது  இவ்வாறு இருக்க 2015.02.28 திகதி மக்களின் நலன் கருதி இச் செய்தியினை இணையத்தள ஊடகமொன்றில் வெளியிட்டனர். அதன் பிறகு  இச் செய்தியினை பார்வையிட்ட நவகிரி நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட  நீர்ப்பாசன பணிப்பாளர் ஆகியோர்   2015.03.01 திகதி காலப்பகுதியில் சேதமடைந்த வீதியினை பார்வையிடுவதற்காக  வருகைதந்தனர். அப்போது  அவ் இடத்திற்கு விரைந்த மக்கள் அதிகாரிகளை பாத்து நாங்கள் படும் கஸ்ரம் உங்களுக்கு தெரியவில்லையா ஐயா இதனை 
எப்போது எங்களுக்கு புனரமைப்பு செய்து தருவீர்கள் என்று மக்கள் கேட்ட போது அதிகாரிகள் மக்களிடம் கூறிய பதில் இதனை இணையத்தள ஊடகமொன்றில் வெளியிட்டதால் உங்களுக்கு இதற்கான தீர்வினை பெற்றுத்தரமாட்டோம் என்று  கூறி விட்டு சென்றனர். 

அரசாங்கம் அதிகாரிகளை நியமித்ததன் நோக்கம் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குதல், அவர்களின் குறைபாடுகளை அறிந்து அதற்கான உரிய தீர்வினை பெற்றுக்கொடுத்தல் என்பனவாகும் 

இக் கிராம மக்களுக்கு தற்காலிக தீர்வாக  1 1/2 அடி விட்டமுள்ள 12 அடி நீளம் கொண்ட குழாயினை போட்டு வீதியினை செப்பனிட்டு கொடுத்தல் போதும். 

உரிய தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் அவதானத்துடன் .

-
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate