செவ்வாய், 27 அக்டோபர், 2015

அரசாங்கத்திற்கு படையினர் ஒத்துழைப்பதில்லை : மனித உரிமை கண்காணிப்பகம்

புதிய அரசாங்கத்தின் மாற்றங்கள் மற்றும் செயற்பாடுகளை மட்டக்களப்பில் கடமையாற்றிவரும் சில படையினர் ஏற்றுக்கொள்ளாது செயற்பட்டு வருவதாக, மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்டம் மற்றும் கொள்கைப் பிரிவு பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தாம் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது, இராணுவம் காணிகளை அபகரித்து வருவதாகவும் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக செயற்பட்டு வருவதாகவும் மக்கள் முறையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளதாகவும், மனித உரிமை நிலைமைகளில் மாற்றம் செய்வதற்கு முனைப்புக் காட்டி வருகின்ற நிலையில், கிழக்கிலுள்ள படையினர் அதற்கு ஒத்துழைப்பு வழங்காமை பாரிய குறைபாடாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate