பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டக்கார்களை கலைப்பதற்காக பொலிஸார், கண்ணீர்ப்புகைப் பிரயோகம், மற்றும் தடியடி பிரயோகம் என்பனவற்றினை மேற்கொண்டிருந்தனர்.
அதன்போது பல மாணவர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் உயர்கல்விக்கு நிகரான தமது கல்வித்தரத்தினை உயர்த்துமாறு கோரி மாணவர்களால் குறித்த போராட்டாம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நல்லாட்சி அரசே மாணவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள், மாணவர்கள் மீது தாக்கியமையை வன்மையாக கண்டிக்கின்றோம் போன்ற பதாதைகளை ஏந்தியபடி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக