மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஸ்ரீநேசன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.11.2015) பிற்பகல் 4.00 மணிக்கு இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இதுதொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணியளவில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு பஞ்சலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் கடந்த 1993.07.15 முதல் 2004.04.11 வரை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் சிரேஸ்ட ஆசிரியராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 48,221 என்ற அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்தார்
0 facebook-blogger:
கருத்துரையிடுக