மட்டக்களப்பு, களுவன்கேணியில் மழை வெள்ளத்தில் மூழ்கி குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் களுவன்கேணி தேவாலய வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் கிருஸ்ணபிள்ளை (வயது 65) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
களுவன்கேணியில் தென்னம் தோட்டமொன்றில் காவலாளியாக வேலை செய்யும் இவர் தோட்டத்திலிருந்து மண்ணெண்ணை வாங்குவதற்காக கடைக்கு வரும் வழியில் நீரோடையில் மூழ்கி; உயிரிந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நீரோடையின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக