வெள்ளி, 30 அக்டோபர், 2015

மூதூரில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான வர்த்தக கண்காட்சி

உள்ளூர் உற்பத்தி பொருட்களின் வர்த்தக கண்காட்சியும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) திருகோணமலை மூதூர் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலகம், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்விற்கு WE EFFECT நிதி அணுசரனை வழங்கியிருந்தது.
நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் N.A.A.புஸ்பகுமார, மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் WE EFFECT  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, கிண்ணியா, மூதூர், வெருகல், சேருவில மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்த உள்ளுர் உற்பத்தியாளர்களது உற்பத்தி பொருட்கள் கண்காட்சிப்படுத்தப்பட்டதோடு கலை நிகழ்வுகளுடன் சிறுவர் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றது.
கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், அரசாங்க வேலைகளை எதிர்பார்க்காது இவ்வாறான சுய தொழில்களை மேற்கொள்வதன் ஊடாக கூடிய வருமானத்தினை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான கடன் வசதிகள் சந்தைப்படுத்தல் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இக்கண்காட்சியானது நாளை மற்றும் நாளை மறுதினமும் நடாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
DSC_4073

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate