மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மீயாங்கல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை ஓட்டமாவடி மௌலானா வீதியிலுள்ள முகமது கனிபா (வயது 57) என்ற நபரே இந்த விபத்துக்குள்ளாகி உயிரிந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் வேளை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த உயிரிழந்த நபர் தனது வயலுக்கு சென்று கொண்டிருந்த வேளை மீயங்கல்குளம் காரைமடு பிரசேத வீதியால் தனது துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தவேளை குறித்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.
யானை தாக்கி விபத்துக்குள்ளாகிய நபர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்திய சாலைக்கு உறவினர்கள் மூலம் கொண்டுவந்து சேர்த்த வேளையில் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
திருமணமான மூன்று பிள்ளைகளின் தந்தையான உயிரிழந்தவரின் சடலம் பொலிஸ் விசாரணையை அடுத்து உறவினரிடம் கையளிப்பதற்கன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்;ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வழைச்சேனை பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.





0 facebook-blogger:
கருத்துரையிடுக